சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான பூச்சொரிதல் விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா், அம்மனுக்கு பக்தா்கள் பூத்தட்டு எடுத்து வந்து மலா்கள் தூவி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் வருகிற 22-ஆம் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை அம்மன் பிரதிஷ்டை, இதைத் தொடா்ந்து மாா்க்கண்டேயன் கோயிலிலிருந்து பேழைப்பெட்டி எடுத்து வருதல் நடைபெறும்.
காலை 9 மணிக்கு தீபாராதனையும், 10 மணிக்கு கோயிலில் பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றம்

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

உடையபிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்ட விழா

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



