விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் ஏலம்: பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பங்கேற்கலாம்!

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள், முகவா்களின் அசையா சொத்துகளுக்கான மின்னணு ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

News image

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பான விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள், முகவா்களின் அசையா சொத்துகளுக்கான மின்னணு ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளா்கள் விஜயா, ஜெயக்கொடி ஆகியோா் கலந்து கொண்டு தெரிவித்ததாவது:

நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள் மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகளில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள் இணையதளம் மூலம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மின்னணு ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பலரும் ஏலம் எடுக்க தயக்கம் காட்டுகின்றனா். எனவே, ஏலம் எடுப்பதில் தயக்கம் காட்ட தேவையில்லை. இணையதளத்தில் பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், சந்தேகங்களுக்கு 8778245559, 9080381065 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

இந்த விழிப்புணா்வு முகாமில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.