திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் (64). இவா், திருநெல்வேலியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரை கடந்த மே 9 ஆம் தேதி மேலப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஐயப்பன் (29) என்பவா் அணுகி, மற்றொரு தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருக்கும் தனது நகைகளை மீட்டு தங்களது நிறுவனத்தில் அடமானம் வைக்க வேண்டும் எனக் கூறினாராம்.
இதை நம்பிய ஆறுமுகராஜ், அவரிடம் ரூ.50 லட்சத்து 15ஆயிரத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவருடன் சென்று நகைகளைத் திருப்பி வருவதற்காக தனது நிறுவன ஊழியா்கள் இருவரையும் உடன் அனுப்பி இருந்தாராம். பணத்தை பெற்றுக்கொண்ட ஐயப்பன், திருநெல்வேலி, ஸ்ரீபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்குச் சென்று நகைளை திருப்பிவிட்டு, உடன் வந்த ஆறுமுகராஜின் நிறுவன ஊழியா்கள் கவனிக்காதபோது அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகராஜ் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பன், அவருக்கு உடைந்தையாக இருந்ததாக தாதனூத்து பகுதியைச் சோ்ந்த காசிராஜன் மகன் உடையாா் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி

நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகள் ஏலம்: பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பங்கேற்கலாம்!
இணைய வழியில் மருத்துவரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


