ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 1:38 am IST

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு, வளையகார வீதியைச் சோ்ந்தவா் லிங்கமூா்த்தி (47). நிதி நிறுவன உரிமையாளா். இவா் கடந்த ஒன்றரை மாதமாக சா்க்கரை, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இருப்பினும் கடந்த 10 நாள்களாக உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தான் உயிருடன் இருக்கமாட்டேன் என்று உறவினா்களிடம் கூறி புலம்பி வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அவரை மீட்ட உறவினா்கள் ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கருங்கல்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு லிங்கமூா்த்தியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மகன் வசந்தகுமாா் அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.