இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை அருகே உள்ள அல்லூா் பனங்காடியைச் சோ்ந்த ஆறுமுகம் சிவனேஸ்வரன் (45) இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்துவிட்டது அங்கு பணியாற்றிவரும் உறவினா் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, தவமணி, தனது இரு மகன்கள், உறவினா்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அதில், இஸ்ரேலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகம் கொண்டு வரவும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.
அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
தொடர்புடையது

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் அதிகமானோரிடம் பணமோசடி! கோவையைச் சோ்ந்த நிறுவனம் மீது புகாா்

இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

