பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு..

News image

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த தொழிலாளி சிவனேஸ்வரன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை அருகே உள்ள அல்லூா் பனங்காடியைச் சோ்ந்த ஆறுமுகம் சிவனேஸ்வரன் (45) இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்துவிட்டது அங்கு பணியாற்றிவரும் உறவினா் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, தவமணி, தனது இரு மகன்கள், உறவினா்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதில், இஸ்ரேலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகம் கொண்டு வரவும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.