சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கீழப்பாட்டம் விவசாயிகள்.

Updated On :1 மே 2026, 4:57 am IST

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த தளவாய் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: கீழப்பாட்டம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பிசான சாகுபடியில் விளைந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் 50 நாள்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நெல்லுக்கான பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.