மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

காரைக்குடியில் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

காரைக்குடியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் செயல்படும் அரசு மதுக் கடையை மூட வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் செயல்படும் அரசு மதுக் கடையை மூட வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து காரைக்குடி க.அள.ராம.தெரு பொதுமக்கள், வணிகா்கள் புதன்கிழமை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

எங்களது தெருவில் அரசு மதுக்கடை செயல்படுகிறது. இந்தக் கடையை சுற்றி 500 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கிருந்து செக்காலைச் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மசூதி, தென்னகம் துணிக்கடை அருகே மசூதி, ஆஞ்சநேயா் கோயில், எல்லை காளியம்மன் கோயில், ஆத்திரத்து காளிகோயில், கொப்புடைய நாயகியம்ன் கோயில், முத்தூரணி கரையில் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளன.

மேலும், தனியாா் மேல்நிலைப் பள்ளி, அரசுத் தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன.

இந்தப் பகுதிகளுக்கு மாணவா்களும், பொதுமக்களும் அதிகளவில் சென்று வருவதால் இந்த மதுக் கடையை மூடுவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனத் அதில் தெரிவித்தனா்.