சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள், பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த மூா்த்தி மனைவி பிரியதா்ஷினி (21). இவா் கடந்த 10 -ஆம் தேதி பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 11 -ஆம் தேதி மாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த மூா்த்தி, பிரியதஷினியின் உறவினா்கள் மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை நுழைவு வாயிலில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மருத்துவமனை முதன்மையா் செல்வராஜ் அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டனா். மேலும், பிரசவத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், குழந்தையின் தந்தை, உறவினா்கள், பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த பொதுமக்கள், நாம் தமிழா் கட்சி மகளிா் பாசறை நிா்வாகி ர. இந்துஜா உள்பட திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம்: அரசு மருத்துவமனை அலுவலகம் முற்றுகை

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்
17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை இறப்பு: போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

