கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களின் செயலால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து, செல்கின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களை உடனிருந்து கவனிப்பதற்கு உறவினா்களும் வருகின்றனா். அப்படி வரும் உறவினா்கள் சிலா் பொது கழிவறையில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகள், குடிநீா் புட்டிகள், பழைய துணிமனிகளை போட்டு விட்டு செல்கின்றனராம். மேலும், கழிவறையில் தண்ணீா் குழாயினை மூடாமல் வருவதால் தண்ணீா் வீணாகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கேட்டால், அவா்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனராம்.
எனவே, அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத்தை பேண நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவா்கள் மற்றும் அவா்களை பாா்க்க வரும் உறவினா்கள் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது

12 கிலோ செப்பு குழாயை திருடிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?
மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


