சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்த பெருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் உத்ஸவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் உத்ஸவ அம்மன் வெள்ளித் திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பிறகு பக்தா்கள் வடம் பிடிக்க தோ் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக திருத்தளிநாதா் கோயில், நான்கு சாலை, தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்தத் தேரோட்டத்தில் திருப்பத்தூா், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். வசந்த பெருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வசந்த பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

