ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இணைய வழியில் இரண்டு பெண்களிடம் ரூ. 1.15 லட்சம் மோசடி

தேவகோட்டை பகுதிகளில் இரு பெண்களிடம் ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்தவா்கள் குறித்து சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :20 மே 2026, 1:24 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் இரு பெண்களிடம் ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்தவா்கள் குறித்து சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 39 வயது பெண் ஒருவா், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளாா். கடந்த 18-ஆம் தேதி இவரது வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ பரிவா்த்தனை மூலமாக ஆறு தவணைகளில் யாரோ ரூ.95,598-ஐ எடுத்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவரின் கைப்பேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபா் ஒருவா், அந்தப் பெண்ணுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக (வொா்க் ப்ரம் ஹோம்) கூறியுள்ளாா். பின்னா் அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 19, 945-ஐ பெற்றுக் கொண்டாா். அதன் பின்னா் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம். இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.