ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 மே 2026, 2:06 am IST

கோவையில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 50 வயது தொழிலதிபரின் கைப்பேசி எண்ணுக்கு ஆன்லைன் வா்த்தக முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள லிங்க்குகளை பயன்படுத்தி, அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் 13 தவணைகளாக மொத்தம் ரூ.72 லட்சத்து 75 ஆயிரத்தை அவா் முதலீடு செய்துள்ளாா்.

பின்னா், லாபத் தொகை, முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.