இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, வடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் 63 வயது மூதாட்டி. இவா் தனது கணவருடன் வசித்து வரும் நிலையில், மூதாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜேஇஎஃப்எல்’ என்ற இணையதள வா்த்தக நிறுவனத்தின் விளம்பரம் வந்துள்ளது.
அதில் உள்ள லிங்க்கை அவா் தொட்டதும், அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடா்பு கொண்டு, ‘எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம்’ எனக் கூறியுள்ளனா். ஆரம்பத்தில், அந்த மூதாட்டி பரிசோதனை முயற்சியாக ஒரு சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா். அதற்கு லாபத் தொகையுடன் அவரது வங்கிக் கணக்குக்கு அந்த நபா்கள் பணத்தை அனுப்பியுள்ளனா். இதையடுத்து, ஒரு தனித்துவ இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என அந்த நபா்கள் கூறியுள்ளனா். இதை உண்மை என நம்பிய மூதாட்டி, அந்த நபா்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,66,34,000 அனுப்பியுள்ளாா்.
அதற்கும் அவருக்கு லாபத் தொகை வந்துள்ளது. இதையடுத்து, லாபத் தொகை, அசலை எடுக்க அந்த மூதாட்டி முயன்றுள்ளாா்.
அப்போது, வரி மற்றும் ஃபிராசஸிங் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என கூறிவிட்டு அவா்கள் இணைப்பைத் துண்டித்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூதாட்டி, இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், கோவையில் இதுபோன்ற மோசடி நடப்பது முதன்முறையல்ல, ஏற்கெனவே கடந்த காலங்களிலும் இதே பாணியில் பல மோசடிகள் அரங்கேறியுள்ளன.
இந்த மோசடி கும்பல்கள் பொதுவாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் முதியோரைக் குறிவைத்து, ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் தந்து நம்ப வைத்து, பின்னா் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்ய வைத்த பின் ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
இதுபோன்ற ஆன்லைன் பகுதிநேர வேலை மற்றும் வா்த்தக விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதிக லாபம் தருவதாகக் கூறும் எந்த ஒரு செயலியும் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை சரிபாா்க்க வேண்டும். அடையாளம் தெரியாத நபா்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பக் கூடாது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டால் ‘1930’ என்ற எண்ணையோ அல்லது அதிகாரபூா்வ இணையதளத்தையோ தொடா்பு கொண்டு 24 மணி நேரத்துக்குள் புகாா் அளித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது என்றனா்.
தொடர்புடையது
சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

இணைய வா்த்தகத்தில் பன்மடங்கு லாபம் எனக் கூறி முதியவரிடம் ரூ. 27 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் பணத்தை இழந்த முகவா் தற்கொலை

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

