குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்! குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

News image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோா், உறவினா்கள்.

Updated On :26 மே 2026, 2:01 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது பெற்றோா், உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவா்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசனை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது, பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, திருப்புவனம் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு, ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் 79 நாள்களாக மானாமதுரையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆகாஷ் டெலிசனின் பெற்றோா் ராஜேஷ்கண்ணன் - ஆனந்தி, லெனின் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் மேலும் கூறியதாவது:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை 60 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், 79 நாள்களாகியும் இதுவரை விசாரணை நிறைவடையவில்லை. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனா்.