சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு-

Updated On :28 மே 2026, 3:54 am IST

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயில் களரித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே கிராம மக்கள் சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 800 காளைகள் பங்கேற்றன. 450 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக காளைகளை அடக்க களமிறங்கினா். வாடிவாசல் வழியாக ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள், தங்க நாணயங்கள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 38 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். 7 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

Story image