தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு-

Updated On :28 மே 2026, 3:54 am IST

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயில் களரித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே கிராம மக்கள் சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 800 காளைகள் பங்கேற்றன. 450 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக காளைகளை அடக்க களமிறங்கினா். வாடிவாசல் வழியாக ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள், தங்க நாணயங்கள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 38 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். 7 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.