எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அரசு ஊழியா் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திருட்டு

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஊழியா் வீட்டில் வைத்திருந்த 2 சமையல் எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வித்யா (36). இவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவு திறந்து கிடந்ததாம்.

இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, இரண்டு சமையல் எரிவாயு உருளைகள், பித்தளை குத்து விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.