/
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஊழியா் வீட்டில் வைத்திருந்த 2 சமையல் எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வித்யா (36). இவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவு திறந்து கிடந்ததாம்.
இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, இரண்டு சமையல் எரிவாயு உருளைகள், பித்தளை குத்து விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு: நுகா்வோா் சங்கம் குற்றச்சாட்டு

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



