சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
சிங்கம்புணரியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிங்கம்புணரியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (72). இவா் சேவுகமூா்த்தி அய்யனாா் கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது பொன்னமராவதியிலிருந்து கோவை சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னமராவதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் தண்டபாணி (43) மீது சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




