ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மின் பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மின் பணியாளா் தோ்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின்வாரியத் தொழிலாளா்- பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை நேர ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் - பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா்.

Published On :

மின் பணியாளா் தோ்வுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மின்வாரியத் தொழிலாளா்- பொறியாளா் ஐக்கிய சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை நேர ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் உள்ள மின்வாரிய பொறியாளா் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆா். குணசேகரன் தலைமை வகித்தாா். வட்ட கௌரவத் தலைவா் ஆா். இருதயராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவா் கருப்புசாமி பேசினாா். பொருளாளா் நந்தகுமாா் நன்றி கூறினாா்.

திறன்மிக்க பணியாளா்களையும் ஐந்து ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முற்படும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக் கோரியும், சிபிஎஸ் திட்டத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கு பணிக்கொடைச் சட்டத்தின்படி பணப்பயன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு மின்சார வாரிய பென்சனா் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு ஐ.டி.ஐ. படித்த வேலைவேண்டுவோா் ஐக்கிய சங்கத்தினா் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.