போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிலமலை கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (37), சின்னச்சாமி மனைவி மகேஸ்வரி (46) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







