சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

போடி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கல்: 2 பேர் கைது

போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 சிலமலை கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். 
இதில் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (37), சின்னச்சாமி மனைவி மகேஸ்வரி (46) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.