திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பொறியாளர் சாவு

கூடலூரைச் சேர்ந்தவர் முருகானந்தன் (52). இவர் லோயர்கேம்ப்பில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:16 am

DIN

கூடலூரைச் சேர்ந்தவர் முருகானந்தன் (52). இவர் லோயர்கேம்ப்பில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை இரவு முருகானந்தனும், அவருடன் உதவியாளராக பணிபுரியும் ஜாபர்அலி என்பவரும் கம்பம் - கூடலூர் பிரதான சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனத்தை முருகானந்தன் ஓட்டிச் சென்றார். கூடலூரை நோக்கி வரும் போது எதிரே வந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் மீது மோதாமல் இருக்க முருகானந்தன் இருசக்கர வாகனத்தை திருப்பிய போது இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த முருகானந்தன் தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஜாபர் அலி லேசான காயமடைந்தார்.கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.