புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மூடப்பட்ட ஆலை முன் தொழிலாளர்கள் முற்றுகை

தேனி அருகே கோடங்கிபட்டி சாலையில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் தனியார் நூற்பாலை முன், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:18 pm

DIN

தேனி அருகே கோடங்கிபட்டி சாலையில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் தனியார் நூற்பாலை முன், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி-கோடாங்கிபட்டி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நூற்பாலை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. இந்த ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஆலைத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். 
இந்த நிலையில், தற்போது பூட்டிக் கிடக்கும் ஆலையில் உள்ள இயந்திரங்களை ஆலைக்கு கடன் வழங்கிய வங்கி நிர்வாகம் முலம் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து, பூட்டி வைக்கப்பட்டுள்ள ஆலை முன், அதில் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் நலன் கருதி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிகைகளை வலியுறுத்தினர்.
பின்னர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு தேனி காவல் நிலைய ஆய்வாளர் முருகானந்தம் கேட்டுக் கொண்டதை அடுத்து, தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.