ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்குள்பட்ட காமராஜர் நகர், ரயில்வே பீடர் சாலை, நாடார் தெரு, பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி, குமராபுரம், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்கு உடைந்து மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தெரு விளக்குகளை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

