வீரபாண்டியில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தாக்கியதாக ஒருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியில், சித்திரை திருவிழாவையொட்டி கௌமாரியம்மன் கோயில் தெற்கு வாசல் பகுதியில் வருஷநாடு காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெய்சங்கர், காவலர்கள் ராதிகா, ஜெயலட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் ஈஸ்வரன் (31), தேனி, பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி நல்லம்மாள், மகள் சுகன்யா ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்ட பாதை வழியாக கோயிலுக்குள் செல்ல முயன்றதை தடுத்ததற்காக தன்னையும், பெண் காவலர்கள் ராதிகா, ஜெயலட்சுமி ஆகியோரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தலைமைக் காவலர் ஜெய்சங்கர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் ஈஸ்வரன், நல்லம்மாள், சுகன்யா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

