கம்பம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சாமாண்டிபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி மகன் தினேஷ்குமார்(22). பட்டதாரியான இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
விடுமுறையில் ஊருக்கு வந்தவர் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றாராம். இரவு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர், தினேஷை காணவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை சின்னவாய்க்கால் கரையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அந்த வழியே சென்றவர்கள் தினேஷ் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

