போடி அருகே சிலமலையில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலர் வைரமுத்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
சிலமலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், சர்வே எண் 472/2 ஏ-ல் உள்ள நிலத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை தற்போது வரை வருவாய் துறையினர் முறையாக நில அளவை செய்து உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து, அதற்குரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

