தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் கம்பம் கிழக்கு கூடலூர், சின்னமனூர் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உள்பட்ட சுருளிப்பட்டி காப்புக்காடு, நாராயணத்தேவன்பட்டி பீட், யானைக்கஜம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காய்ந்த சருகுகள் மீது பிடித்த தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. கம்பம் கிழக்கு வனச்சரகர் தினேஷ் தலைமையில் தீத் தடுப்பு காவலர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி வனச்சரகர் தினேஷ் கூறியது: பனிக்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கும்போது, மரக்கிளைகள், இலைகள் உதிர்ந்து, காய்ந்து சருகாகக் கிடக்கும். அந்த நேரங்களில் அதிக வெயில் காரணமாகவோ அல்லது மரங்களில் ஏற்படும் உராய்வால் தீப்பிடிக்கிறது. மேலும் வனப்பகுதியில் தீப் பிடிப்பதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
