ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

6 மாதங்களுக்கு பிறகு லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி தொடக்கம்

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 6 மாதங்களுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.

News image
லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி தொடங்கியது.
Updated On :1 ஆகஸ்ட் 2020, 10:56 am

DIN

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 6 மாதங்களுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர் கேம்ப் வழியாக கொண்டு வரப்பட்டு, மின்சார உற்பத்தி நடைபெறும்.

கடந்த பிப்ரவரி 10ல் மின்சார உற்பத்தி அணையிலிருந்து தண்ணீர் வரத்து குறைவால் நிறுத்தப்பட்டது.

தற்போது சனிக்கிழைமை முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதனால் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் மூன்றாவது  மின்னாக்கியில் உற்பத்தியை  மின்சார வாரியத்தினர் தொடங்கி உள்ளனர்.

22 மெகாவாட் மின்சாரம் சனிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கியது. 

அணையின் நீர்மட்டம் விவரம்

முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழைமை  நிலவரப்படி 115.25 அடி உயரமாகவும், நீர் இருப்பு  1,772 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 438 கன அடியாகவும், வெளிேற்றம் 300 கன அடியாகவும் இருந்தது, 

பெரியாறு அணைப்பகுதியில்  13.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில்  7.8 மி.மீ., மழையும் பெய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.