4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை இல்லை: கம்பம் விவசாயிகள் கவலை 

கம்பம் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News image
பீட்ரூட் அறுவயில் விவசாயிகள்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 9:44 am

DIN

கம்பம் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான காமயகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சை இதற்கு அடுத்தபடியாக பீட்ரூட், நூக்கல், முள்ளங்கி, புடலை, வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.

இங்கு விளையக்கூடிய காய்கறிகளை வியபாரிகள் தோட்டத்தில் நேரடியாக கொள்முதல் செய்து மதுரை, ஒட்டன்சத்திரம், திருச்சி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 80 நாள்களுக்கு முன்பு பயிர் செய்யப்பட்ட பீட்ரூட் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ஒரு மூடை( 83 கிலோ) ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு மூடை (83 கிலோ) ரூபாய் 390க்கு விற்பனையாகின்றன என்பது குறிப்பிடதக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.