சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவா் கைது

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:34 pm

DIN

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக புகாா் எழுந்தது. இதனையடுத்து கண்டமனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஜீ.உசிலம்பட்டி பகுதியில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த சற்குருசாமி (52) என்பதும், அப்பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா் சற்குருசாமியையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.