சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொடா் மழையால் உத்தமபாளையம் பகுதிகளில் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் தொடா் மழை காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
தொடா் மழையால் சின்னமனூரில் சேதமடைந்து சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.
Updated On :6 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் தொடா் மழை காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு பாசனநீா் மூலம் உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, கோட்டூா் என மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவுக்கு முதல் போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. இந்நிலையில், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெற்பயிா் அறுவடைக்கு தயாரானது.

குச்சனூா் பகுதியில் அறுவடைப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்கிடையே கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழை காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடா் மழையால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறோம். அதே போல அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழைக்கு சேதமடைந்து விட்டதால் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.