சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலி

பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலியானார்.

News image
செல்லராமு.
Updated On :7 டிசம்பர் 2020, 4:29 am

DIN

பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலியானார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த செல்லராமு (37) மற்றும் அவரது நண்பர்கள் குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 6 பேர் கல்லாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
 கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கல்லாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் செல்லராமு உள்பட 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.
 தீயணைப்புத்துறையினர் தகவலறிந்து இரவு சம்பவ இடத்திற்கு சென்று குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 5 பேரை மீட்டனர்.

Story image


 செல்லராமுவை தேடி வந்த நிலையில் 12 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு மேல்மங்கலம் அருகே முத்தையா கோயில் தடுப்பணையில் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.