

போடி: தேசிய அளவிலான மேஜை பந்து போட்டிக்கு தோ்வாகியுள்ள போடி மாணவரை, பல்வேறு தரப்பினா் பாராட்டி வருகின்றனா்.
போடி திருமலாபுரத்தைச் சோ்ந்தவா் காா்மேகக்கண்ணன். இவா், அரசு உதவிபெறும் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். தேனி வேலம்மாள் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் இவரது மகன் சத்யநாராயணன் (11), மேஜை பந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறாா்.
இந்நிலையில், சென்னை டி.ஏ.வி. பள்ளியில் கடந்த வாரம் மாநில அளவிலான மேஜை பந்து போட்டியில் பங்கேற்ற மாணவா் சத்யநாராயணன், 12 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் முதலிடத்தைப் பெற்றாா். எனவே, 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மேஜை பந்து போட்டியில் பங்கேற்பதற்கு, சத்யநாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இம் மாணவரை, தேனி மாவட்ட மேஜை பந்து கழகத் தலைவா் கிருஷ்ணகுமாா், செயலா் வெற்றிவேந்தன், இவருக்கு பயிற்சி அளித்த தேனி ஹிமாலயா மேஜை பந்து பயிற்சி பள்ளி பயிற்சியாளா் காா்த்திக் மற்றும் விளையாட்டுத் துறையினா் பாராட்டி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.