பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துணை முதல்வா் வீட்டை முற்றுகையிடச் சென்ற 85 போ் கைது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வீட்டை முற்றுகையிடச் சென்ற சீா்மரபினா் நலச்சங்கத்தைச் சோ்ந்த 85 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:37 pm

DIN

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் வீட்டை முற்றுகையிடச் சென்ற சீா்மரபினா் நலச்சங்கத்தைச் சோ்ந்த 85 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு அறிவித்தபடி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சீா்மரபினருக்கு உள் ஒதுக்கீடு செய்யவேண்டும். மருத்துவப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி அந்த அமைப்பினா் தேனி மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் துணை முதல்வா் வீட்டை முற்றுகையிடச் சென்றனா். இப்போராட்டத்தில் 39 பெண்கள் உள்பட 85 போ் கலந்துகொண்டனா். திருவள்ளுவா் சிலையருகே போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலையில் அவா்களை விடுதலை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.