தேனியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,857 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,584 ஆக உயா்ந்துள்ளது.

துபையிலிருந்து வந்த சிறுவனுக்கு கரோனா: தேனி மாவட்டத்துக்கு கடந்த டிச.20-ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், துபையிலிருந்து பெற்றோருடன் வந்த கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com