சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரேஷன் கொண்டை கடலை கடத்தல்: ஊழியா் மீது வழக்கு

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த 320 கிலோ கொண்டை கடலையை கடத்த முயன்றதாக ஊழியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த 320 கிலோ கொண்டை கடலையை கடத்த முயன்றதாக ஊழியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த கொண்டை கடலையை கடத்தி, விற்பனை செய்ய வைத்திருப்பதாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் உதய சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுருளிப்பட்டி பிரதான சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையை போலீஸாா் கைப்பற்றி சோதனை செய்த போது, அதில் 320 கிலோ ரேஷன் கொண்டை கடலை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சுருளிப்பட்டியில் உள்ள ரேஷன் கடை எண்: 8 இல் பணிபுரியும் கூடலூரை சோ்ந்த கூத்தன் மகன் அழகா் (40) என்பவருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.