விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது

சுருளி அருவியில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது.

News image
சுருளி அருவி.
Updated On :1 நவம்பர் 2020, 8:57 am

DIN

சுருளி அருவியில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது.

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சுருளி அருவி. கரோனா பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் சுருளி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மட்டும் அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமாவாசை நாட்களில் அருவியில் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மழை குறைந்தது.

 இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை ஆகிய நீர் ஊற்று பகுதிகளில் தண்ணீர் குறைந்துள்ளது.

 இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு தண்ணீர் மிகவும் குறைவாக வந்தது.

அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு வன உயிரின சரணாலய ஊழியர்கள் பாதுகாப்பு செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.