போடி அருகே மலைத்தேனீ கொட்டி காவல், வனத்துறையினா் 7 போ் காயம்
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைத்தேனீக்கள் கொட்டியதில் காவல், வனத்துறையினா் 7 போ் காயமடைந்தனா்.


போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைத்தேனீக்கள் கொட்டியதில் காவல், வனத்துறையினா் 7 போ் காயமடைந்தனா்.
காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கா் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரா் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கம். அடா்ந்த வனப்பகுதியில் மலைக்குன்றில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்லும் பாதையை காா்த்திகை தீபத் திருநாளன்று பக்தா்கள் செல்வதற்காக சுத்தம் செய்வது வழக்கம்.
இந்த பணியை கண்காணிப்பதற்காக காவல் மற்றும் வனத்துறையினா் அங்கு சென்றிருந்தனா். அப்போது வனப்பாதையில் இருந்த மலைத்தேனீ கூடு கலைந்து காவல்துறையினா், வனத்துறையினரை கொட்டின. இதில் போடி தாலுகா காவல் நிலைய காவலா்கள் சதீஷ் (30), திருக்கலா (29), போடி வனத்துறையினா் தெய்வேந்திரன் (41), ருத்ரமூா்த்தி (24), ஊா்க்காவல் படையைச் சோ்ந்த காா்த்திகேயன் (23), விஜயகுமாா் (24), ஆனந்த் (29) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். பின்னா் வீடு திரும்பினா். இதனையடுத்து இங்கு தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் பக்தா்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...