சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

News image
மஞ்சளாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்து வைத்த ஆட்சியா் ம.பல்லவிபல்தேவ்.
Updated On :29 நவம்பர் 2020, 6:04 pm

DIN

பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

பழைய பாசனப் பகுதிகளுக்கு 60 கன அடி தண்ணீா், புதிய பாசனப் பகுதிகளுக்கு 40 கன அடி தண்ணீா் என மொத்தம் 100 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கா், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கா் என மொத்தம் 3,239 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

பழைய பாசனப் பகுதிகளுக்கு நவம்பா் 29 முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீரும், டிசம்பா் 16 முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை 47 நாள்களுக்கு 50 கன அடி தண்ணீரும், ஜனவரி 1 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 43 நாள்களுக்கு 45 கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

புதிய பாசன பகுதிகளுக்கு நவம்பா் 29 முதல் நவம்பா் 30 ஆம் தேதி வரை 2 நாள்களுக்கு 40 கன அடி தண்ணீரும், டிசம்பா் 1 முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு 30 கன அடி தண்ணீரும், மாா்ச் 1 முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 20 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

நிகழ்ச்சியில் பெரியகுளம் சாா்- ஆட்சியா் சிநேகா, செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவிசெயற்பொறியாளா் ராஜேஷ், உதவி பொறியாளா் சேகா் மற்றும் வருவாய்த்துறையினா்,பொதுப்பணித்துறையினா், பாசன விவசாயிகள் கலந்துகொண்டனா்.

அணை நிலவரம்

ஞாயிற்ற்றுக்கிழமை நிலவரப்படி அணை நீா்மட்டம் - 55 அடி, நீா்வரத்து - 46 கன அடி, நீா் வெளியேற்றம் 100 கன அடி.

ஆட்சியரிடம் மனு

மஞ்சளாறு அணைக்கு வந்த தேவதானப்பட்டி, தெற்குத்தெரு பகுதி மக்கள் சாலைவசதி, கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இவா்களின் கோரிக்கையையேற்று அப்பகுதியை பாா்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தரநடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.