விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுக்கக் கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 5:39 pm

DIN

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பாக்குகள், கா்நாடக மாநிலத்தில் விற்கப்படுவதால், அங்கிருந்து பெரியகுளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் வாங்கிவந்து இங்கு விற்கின்றனா்.

இவா்களை கட்டுப்படுத்த போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவுக்கு சில பலசரக்கு கடைகளின் உரிமையாளா்களை கைது செய்து விட்டு, பின்னா் விட்டுவிடுகின்றனா். அவா்கள் மீண்டும் அவற்றை விற்பனை செய்கின்றனா்.

இதனால் பெரியவா்கள், இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே இப்பகுதிகளில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.