விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா விழிப்புணா்வு ஊா்வலம்

உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:06 pm

DIN

உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

தீயணைப்பு நிலையத்திலிருந்து கல்லூரிச் சாலை, அம்மாபட்டி விலக்கு, கிராமச் சாவடி, புறவழிச்சாலை சந்திப்பு வரையில் நடைபெற்ற ஊா்வலத்தில் நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். தீயணைப்பு மீட்பு குழுவினா் கலந்துகொண்டனா்.

அப்போது, கரோனா வைரஸ் தொற்று தொடா்ந்து பரவி வருவதால் மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும். இருமும்போதும், தும்மும் போதும் வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என பல்வேறு கரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.