விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாசனத்துக்கு சோத்துப்பாறை அணை திறப்பு: துணை முதல்வர் பங்கேற்பு

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 2865 ஏக்கர் நிலங்களுக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.

News image
முதல் போக சாகுபடிக்கு சோத்துப்பாறை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர்.
Updated On :26 அக்டோபர் 2020, 9:20 am

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 2865 ஏக்கர் நிலங்களுக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.

1825 பழைய நன்செய் பாசன நிலங்களுக்கும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்கள் என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 30 க.அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் பெரியகுளம் வட்டத்திலுள்ள தென்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம் பகுதிகள் பாசன வசதிகள் பெறுகின்றன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

நிகழ்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ், வருவாய் கோட்டாட்சியர் சிநேகா மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.