விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடி அருகே வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

போடி அருகே வியாழன் அதிகாலை, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

News image
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்.
Updated On :29 அக்டோபர் 2020, 5:33 am

DIN

போடி அருகே வியாழன் அதிகாலை, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி நகரில் செயல்பட்டு வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இந்த கிளையின் வாடிக்கையாளர்கள் சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகம் உள்ளனர். இவர்களின் வசதிக்காக போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடி-தேவாரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு அபாய ஒலி வந்துள்ளது. 

இதுகுறித்து போடி தாலுகா காவல்துறைக்கும் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போடி தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை காலை வரை சோதனைகள் நடைபெற்றது.

பின்னர் வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பணம் ஏதும் திருடு போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருட வந்த நபர்கள் அங்கிருந்த கேமராவை துணியால் மறைத்துவிட்டு திருட முயன்றுள்ளனர். சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருட வந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.