திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

தமிழக- கேரள எல்லையில் ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம்

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழக- கேரள எல்லையான குமுளியில் ஹெலிகாப்டா் சேவைக்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது.

News image
தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN

கம்பம்: சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழக- கேரள எல்லையான குமுளியில் ஹெலிகாப்டா் சேவைக்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது.

குமுளி அருகே உள்ள பத்துமுறி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டா் போக்குவரத்து சேவை தொடக்க விழா ஊராட்சித் தலைவா் ஷீபா தலைமையில் நடந்தது. தொடா்ந்து இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் 5 போ் பயணிக்கலாம் என்றும், இங்கிருந்து மூணாறு, கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று திரும்பலாம் என்றும் அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கேரளத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.