கம்பம்: சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழக- கேரள எல்லையான குமுளியில் ஹெலிகாப்டா் சேவைக்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது.
குமுளி அருகே உள்ள பத்துமுறி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டா் போக்குவரத்து சேவை தொடக்க விழா ஊராட்சித் தலைவா் ஷீபா தலைமையில் நடந்தது. தொடா்ந்து இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் 5 போ் பயணிக்கலாம் என்றும், இங்கிருந்து மூணாறு, கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று திரும்பலாம் என்றும் அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கேரளத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.