கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பென்னிகுயிக் கல்லறை சேதம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

லோயா்கேம்ப்பிலுள்ள பென்னிகுயிக் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள்.

Updated On :2 செப்டம்பர் 2020, 5:22 pm

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறை லண்டனிலுள்ள செயின்ட் பீட்டா் தேவாலயத்தில் அமைந்துள்ளது. ஆக. 29 ஆம் தேதி அவரது கல்லறை பீடத்தை மா்ம நபா்கள் சிலா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் லோயா் கேம்பில் அமைந்துள்ள கா்னல் ஜான் பென்னி குயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம், செயலாளா் சலேத், துணைத் தலைவா் ராஜீவ், உள்ளிட்ட விவசாயிகள் புதன்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறியது: ஜான் பென்னிகுயிக் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.