நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பொதுமுடக்கம் தளா்வு:ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத் தளா்வைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 5:30 pm

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத் தளா்வைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக போக்குவரத்து முடங்கியதால், ரேஷன் அரிசியை கடத்த முடியவில்லை. தற்போது, பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக முடங்கிக் கிடந்த ரேஷன் அரிசி கடத்தல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, தேனி அம்மாச்சியாபுரத்தில் 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சனிக்கிழமை 200 கிலோ ரேஷன் அரிசியை, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.