திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பத்தில் 67 நாட்களுக்குப் பிறகு வாரச்சந்தை திறப்பு

கம்பத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாரச்சந்தை 67 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
கம்பத்தில் 67 நாட்களுக்குப் பிறகு வாரச்சந்தை திறப்பு
Updated On :8 செப்டம்பர் 2020, 7:56 am

DIN

கம்பத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாரச்சந்தை 67 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம்  கம்பம்,   கே.கே.பட்டி,ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, நாராயணதேவன் பட்டி, சுருளிப்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து வாரம் தோறும்  செவ்வாய்க்கிழமை கம்பத்தில் நடைபெறும் வாரச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்க கூடுவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலால் கம்பம் வாரச் சந்தை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரோனா ஊரடங்கால்  அடைக்கப்பட்டிருந்த கம்பம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கியது. முதல் கட்டமாக 25 நபர்கள் கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினர்.

சமூக இடைவெளியுடன் கிருமி நாசினி தெளித்து கடைகள் திறக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வியாபாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.