திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரள மாநிலத்திற்கு குமுளி வழியாக வட மாநில தொழிலாளர்கள் வருகை

குமுளி வழியாக கேரள மாநிலத்தில் கூலி வேலைகளுக்குச் செல்ல வட மாநில ஆண், பெண் கூலி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை குமுளி வந்தனர்.

News image
குமுளி வழியாக கேரளம் வருகை தரும் வட மாநில தொழிலாளர்கள்.
Updated On :11 செப்டம்பர் 2020, 10:28 am

DIN

குமுளி வழியாக கேரள மாநிலத்தில் கூலி வேலைகளுக்குச் செல்ல வட மாநில ஆண், பெண் கூலி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை குமுளி வந்தனர்.

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் கட்டுமான தொழில் ஏலக்காய் தேயிலை தோட்டங்களில் வேலை போன்ற வேலைகளுக்கு வட மாநிலங்களைப் சேர்ந்த ஆண் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

 கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அவர்கள் வேலை செய்து வந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் அவர்களை கேரள மாநிலத்திற்குள் அழைத்து வருகின்றனர். முறையாக அவர்களுக்கு தோற்று பரிசோதனை செய்யப்பட்டு தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து வருகின்றனர்.

 அங்கு இ-பாஸ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்த பின்பு மாதிரிகள் எடுக்கப்படுகிறது. பின்னர் அவர்களது வேலை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களுக்கு அதன் உரிமையாளர்கள் அவர்களை பொறுப்பை ஏற்று அழைத்துச் சென்று அங்கு தனிமைப்படுத்தி வைக்கின்றனர். 

இதற்கான ஆவண சரிபார்ப்புகளை குமுளி வருவாய் துறை சுகாதாரத் துறையினர் சரிபார்த்து கூலி தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர்.

 சனிக்கிழமை மட்டும் இரண்டு பேருந்துகள் மூலமாக சுமார் 120 க்கும் மேலான ஆண், பெண் தொழிலாளர்கள் குமுளி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இதுபற்றி தமிழக வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது முறையாக இபாஸ் பெற்று,  விண்ணப்பம் செய்தவர்களை ஆவணங்களை சரிபார்த்து, அனுப்புவதற்கான, ஏற்பாடுகளை செய்கின்றனர். 

லோயர் கேம்ப் சோதனைச் சாவடியிலும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.