திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தொடர் மழை: சுருளி அருவி பகுதியில் நீர் வரத்து அதிகரிப்பு

சுருளி அருவி நீர்பிடிப்பு வனப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

News image
சுருளி அருவி.
Updated On :13 செப்டம்பர் 2020, 12:30 pm

DIN

சுருளி அருவி நீர்பிடிப்பு வனப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது சுருளி அருவி, ஆண்டு தோறும் நீர்வரத்து தரும் சுருளி அருவியில், கடந்த மார்ச் 25 முதல் கரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ள ஈ்ததைப்பாறை, அரிசிப்பாறை வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர் ஊற்றுகளில் தண்ணீர் வரத்து வந்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. 

அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து இருப்பதால், அருவி வளாகம் சுத்தமாக காட்சியளிக்கிறது, வெள்ளி கம்பிகள் உருக்கி வெள்ளம் போல், தண்ணீர் பார்ப்பதற்கு வெண்மையாக கொட்டுகிறது. இது பற்றி மேகமலை வனச்சரணாலய அலுவலர் ஒருவர் கூறும் போது, சுருளி அருவியில் பொதுமக்கள் வர தடை இருப்பதால், பகலிலேயே யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.