திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனியில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாலம்: ஆய்வுப் பணி தொடக்கம்

தேனியில் நேருசிலை நெடுஞ்சாலை மும்மனை சந்திப்பு பகுதியை மையமாக வைத்து பெரியகுளம் சாலை, குமுளி சாலை, மதுரை சாலை ஆகியவற்றில் ரூ.100 கோடி மதிப்பில் 1,600 மீட்டர் நிளத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு

News image
தேனியில் மேம்பாலம் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள்.
Updated On :18 செப்டம்பர் 2020, 10:49 am

DIN

தேனியில் நேருசிலை நெடுஞ்சாலை மும்மனை சந்திப்பு பகுதியை மையமாக வைத்து பெரியகுளம் சாலை, குமுளி சாலை, மதுரை சாலை ஆகியவற்றில் ரூ.100 கோடி மதிப்பில் 1,600 மீட்டர் நிளத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணி தொடங்கியது.

தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. நகரின் வர்த்தக மையமாக உள்ள பெரியகுளம், குமுளி, மதுரை சாலைகளில் மேம்பாலம் அமைப்பதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது.

தேனி வழியாக சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் திருவிழா காலங்களிலும், கோடை விடுமுறைகளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதாலும், கனரக மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்தால் நகரில் நெரிசல் அதிகரித்து வருதாலும் மேம்பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தேனியில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேனியில் மதுரை, குமுளி, திண்டுக்கல் சாலைகளை இணைக்கும் நேருசிலை மும்முனை சாலை சந்திப்பை மையமாக வைத்து, பெரியகுளம் சாலையில் 800 மீட்டர், குமுளி, மதுரை சாலைகளில் தலா 400 மீட்டர் என மொத்தம் 1,600 மீட்டர் நிளம், 10.9 மீட்டர் அகலத்திற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

தேனியில் புதிய மேம்பாலம் பணிகளை தொடங்குவது, மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைப்பது, புதிய மின் விளக்குககள் அமைப்பது ஆகியவை குறித்து மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில், தேனி கோட்டப் பொறியாளர் முருகேசன், உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பெரியகுளம் சாலையில் மதுராபுரி பகுதியிலிருந்து, குன்னூர் வழியாக பெரியகுளம் - மதுரை இணைப்புச் சாலை திட்டத்திற்கும் விரைவில் ஆய்வு நடைபெற உள்ளது என்று நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.