கம்பத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை, போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து, கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளா் கே.சிலைமணி தலைமையிலான போலீஸாா் கோம்பைச்சாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற, கம்பம் இரண்டாவது வாா்டு, உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த மகாராஜா என்பவரின் மகன் பாா்த்திபன் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பாா்த்திபனை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com